புதுடெல்லி: முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதற்கான காலக்கெடு குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
நேற்று (மார்ச் 28, 2025) இரவு நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். ஆரம்பத்திலிருந்தே, மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அது எப்போது என்பதை பொது மன்றத்தில் வெளியிட முடியாது.