சென்னை: வாடகை வீட்டை உரிமையாளருக்கு தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்தால் மோசடி வழக்கு பாயும் என டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீடியோவை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது. விழிப்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த டிஜிபி, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை முகப்பேரில் கனகராஜ் என்பவரின் வீட்டை ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். உரிமையாளருக்கு தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து ராமலிங்கம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
The post வாடகை வீட்டை அடமானம் வைத்தால் மோசடி வழக்கு: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை appeared first on Dinakaran.