சென்னை: தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் மொத்தம் 5,381 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு, சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை, 2 கட்டங்களாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி சுங்கக் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 வரை உயர்த்தி வசூலிக்கப்படும்.