ஒவ்வொரு வருடமும் உலக வானிலை நாள், மார்ச் 23-ம் நாள் கொண்டாடப்படுகிறது. 2025 இல் ‘CLOSING EARLY WARNING GET TOGETHER’ என்கிற கருத்தாக்கத்தை உலக வானிலை நாள் மையமாகக் கொண்டுள்ளது. உலக வானிலையின் தந்தை என லுக் ஹோவார்ட் (LUKE HOWARD) அழைக்கப்படுகிறார்; இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1801-1841 காலகட்டத்தில் லண்டன் மாநகரின் வானிலை பற்றிய எழுதிய கட்டுரைகள் வானிலை ஆய்வுக்கு வித்திட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரம், தொழில், விவசாயம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில், விஞ்ஞான போன்ற பல துறைகளில் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் வானிலை தந்தை என டாக்டர் மேகநாத் சாஹா என அழைக்கப்படுகிறார். இவர் வளிமண்டல ஆய்வுகளின் காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்.