சென்னை: வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய அதிக நவீன மயமாக்கல் செய்கிறோம். இதற்கான உபகரணங்கள் நிறுவ இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
இந்திய வானிலை துறையின் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில், உலக வானிலை தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.