புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நாகா துறவிகள் ஊர்வலம் நடத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின் மகாகும்பமேளா நடைபெறுகிறது. இந்த விழா இங்குள்ள திரிவேணி சங்கமத்தின் கரைகளில் ஜனவரி 13ம் தேதி முதல் துவங்கியது. இதில் பவுசு பூர்ணிமா, மகர சங்கராந்தி, மவுனி அமாவசை, வசந்த் பஞ்சமி, மக் பூர்ணிமா, மகாசிவராத்திரி என மொத்தம் ஆறு வகையான ராஜகுளியல் நிகழ்ச்சி இடம்பெற்றது. இவற்றில் ஐந்தாவது புனிதக்குளியலான வசந்த் பஞ்சமி பிப்ரவரி 3 -ல் முடிந்தது. இதையடுத்து மகாகும்பமேளாவில் முகாமிட்டிருந்த 13 அகாடாக்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வராணாசிக்கு இடம்பெயர்ந்தனர்.