கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’, விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து ஆமிர் கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்காக அவர் அமீர்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர், இந்திப் பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 3 இடியட்ஸ், பிகே படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.