சென்னை : விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் வெளியிட்டதை, கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த புகாரின் பேரில் விகடன் இணையதளம் பிப்ரவரி 15ம் தேதி முடக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், மேலும் கார்ட்டூன் வெளியிட்ட விவகாரம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது கிடையாது என்றும் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
The post விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு: சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.