சிவகாசி: 'நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆர் உடன் முடிந்து விட்டது. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது', என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ''விஜய் செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரைப் பார்க்க அனைவரும் வருவது இயல்பு. விஜய் சிவகாசி வந்தால் நாங்கள் கூட ஓரமாக நின்று அவரை பார்ப்போம். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது.