விண்வெளித் துறையி்ல் இந்தியா மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என, தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
நாராயணின் சொந்த ஊரான, நாகர்கோவிலை அடுத்துள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஊர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து வி.நாராயணனுக்கு ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்தனர். அங்குள்ள கைலாசநாதர் கோயிலிலும், தனது பெற்றோரின் நினைவிடத்திலும் அவர் வழிபாடு செய்தார்.