புதுடெல்லி: இந்தியா மற்ற நாடுகளைப் பின்பற்றும் நிலையில் இல்லாமல் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகத் திகழ்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பேட்டியில், "இந்தியா மற்ற நாடுகளைப் பின்பற்றும் நிலையில் இல்லாமல் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, இந்திய விண்வெளித் துறையில், சந்திரயான் -3 முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை, விண்வெளி ஆய்வில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. டி.என்.ஏ அடிப்படையிலான கோவிட் -19 தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முதல் ஹெர்பெஸ் வைரஸ் தடுப்பூசி ஆகிய சுகாதார கண்டுபிடிப்புகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது.