ஹனோய்: விமானத்தில் இருந்து இறங்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை, அவரது மனைவி தாக்கியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், அவரது மனைவி பிரிஜிட் ஆகியோர் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஒரு வார கால அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். முதல் பயணமாக அவர்கள், வியட்நாம் ெசன்றுள்ளனர்.
இந்த வார இறுதியில் அவர்கள் இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருக்கும் செல்ல உள்ளனர். வியட்நாம் விமான நிலையத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ேரான் வந்த விமானம் நிறுத்தப்பட்டு, அவருக்கு வரவேற்பு அளிக்க தயார் செய்த போது, அவரை மனைவி பிரிஜிட் கன்னத்தில் அறைந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,’ அதிபர் மேக்ரோனை வரவேற்க, அவர் வந்த விமானத்தின் கீழே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. விமானத்தில் கதவுகள் திறக்கப்பட்டதும் அதிபர் மேக்ரோனும், அவரது மனைவி பிரிஜிட்டும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அதிபர் மேக்ரோன் கன்னத்தில் அவரது மனைவி அறைகிறார். அவரது முகத்தில் கை வைத்து தள்ளுகிறார். அனைவரும் அதை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். விமானத்தில் ஏற இருந்த ஒரு உறுப்பினர் இதைப்பார்த்து பின்வாங்குகிறார். இதைக்கண்ட அதிபர் மேக்ரோன் திடுக்கிட்டார். ஒரு கேமரா இந்த காட்சிகளை படம் பிடிப்பதை உணர்ந்த அவர், உற்சாகமாக இருப்பது போல் கையை அசைத்தபடி படிக்கட்டு வழியாக விமானத்தில் இருந்து இறங்குகிறார். மேக்ேரானை தொடர்ந்து அவரது மனைவி பிரிஜிட் விமானத்தில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்குகிறார்.
அவர் பிடித்துக்கொள்ள ேமக்ரோன் தனது முழங்கை வழங்குகிறார். ஆனால் அவரது சைகையைப் புறக்கணித்து, படிக்கட்டு ஏணியில் உள்ள பகுதியை பிடித்துக் கொண்டு முதல்பெண்மணி பிரிஜிட் கீழே ஏறுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் அதிபர் அலுவலகம் ஆரம்பத்தில் அதை நிராகரித்து வீடியோவின் நம்பகத்தன்மையை மறுத்தது. ஆனால் அசோசியேட்டட் பிரஸ்ஸால் வீடியோ உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டது.
The post விமானத்தில் இருந்து இறங்கும் போது பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் பளார் விட்ட மனைவி: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.