புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த 200 பயணிகள் சுமார் 2 மணி நேரம் விமானத்திலேயே இருந்தனர். இதன்பிறகு அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம் மூலம் 200 பயணிகளும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரம் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.