லண்டன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் புகழ் வாய்ந்த விம்பிள்டன் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 117-ம் நிலை வீரரான டென்மார்க்கின் எல்மர் மோலரை எதிர்த்து விளையாடினார். இதில் தியாஃபோ 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
9-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 6-ம் நிலை வீரரான பிரான்சின் பெஞ்சமின் போன்சியுடன் மோதினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் போன்சி 7-6 (7-2). 3-6, 7-6(7-3), 6-2 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் டேனியல் மேத்வதேவை வீழ்த்தினார்.