கராச்சி: உலகின் எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சவால் அளிக்கும் திறன் கொண்டவர் இந்தியாவின் விராட் கோலி என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூஃப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.