மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்தார். அதன் விவரம்:
>2025-ம் ஆண்டில் ஷுப்மன் கில் 5 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதிக சதங்கள்
அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
>இந்திய வீரர்களில் கேப்டனாக விராட் கோலி கடந்த 2017 மற்றும் 2018-ல் தலா 5 சதங்களை விளாசியிருந்தார். இதன் முலம் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.