தூத்துக்குடி: சர்வதேச தரத்தில் ரூ.381 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ம் தேதி திறந்து வைக்கிறார்.
தென்தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து வசதி அமைகிறது. விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்கு வரத்து, சாலை போக்குவரத்து என அனைத்து விதமான போக்குவரத்து வசதியையும் தூத்துக்குடி பெற்றுள்ளது. தூத்துக்குடியை அடுத்த வாகை குளத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 1992-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் சிறிய வகை விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.