புதுடெல்லி: பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகர் உள்பட 7 இடங்களில் ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (மார்ச் 11) கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்: “2021-22 முதல் 2027-28 வரை 4,445 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ), மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களில் ‘பிஎம் மித்ரா’ ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்காக அரசு இறுதி செய்துள்ளது.