சென்னை: பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்.10-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், கடந்த ஆண்டு பிப்.18-ம் தேதி விபத்தில் 10 பேரும், மே 1, 3 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் தலா 3 பேரும், மே 9-ம் தேதி விபத்தில் 8 பேரும், மே 10-ம் தேதி விபத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.