திண்டுக்கல்: திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக ஞாயிறு மாலை ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.