விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளாச்சேரியில் களிமண்ணாலான சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் மண்பாண்ட கைவினை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.
இங்குள்ள தொழிலாளர்கள் பருவத்துக்கேற்றவாறு மண்பாண்டங்களில் பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். சமையலுக்கு பயன்படும் மண்பானை முதல் விநாயகர் சிலைகள், சிவன், பெருமாள், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமி சிலைகள், சுதந்திர போராட்ட தலைவர்கள் சிலைகளையும் களிமண்ணில் உற்பத்தி செய்து வருகின்றனர்.