விழுப்புரம்: வேளாண் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக மாற்ற முடியும். மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசே விளைநிலங்களை கையகப்படுத்துகிறது.