
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறினார்.
தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அதிகாரத்துடன் வட்டமடித்த பொன்முடியின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்தது. பெண்கள் குறித்து பேசக் கூடாததை பேசியதால் மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனால், அதிமுக வரவான விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் திமுகவில் ஏற்றம் பெற்றார். அவருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

