சென்னை: விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள் மற்றும் உயிரி உரங்களை கோத்தாரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வேளாண் துறையில் பாரம்பரிய நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்து மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள், உயிரி-உரங்கள் மற்றும் திரவ உரங்களை தயாரித்துள்ளது.