புதுடெல்லி: “விவசாயிகளின் தேசிய அளவிலான போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துடன் சுருக்கிவிட மத்திய அரசு முயல்கிறது,” என்று தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாய விளை பொருட்களுக்கானக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணைய சட்டம் குறித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று துவங்கியது. பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் உயரதிகாரிகள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். சம்யுத் கிஸான் மோர்ச்சா என்பி (என்கேஎம் என்பி) சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் டல்லேவால், தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், கேஎம்எம் சார்பில் சர்வன் பாந்தர் கேரளா ஜான், உத்தரப் பிரதேசம் சார்பில் பெலாரி உள்ளிட்ட் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.