ரஜினியின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘கூலி’ படத்தை தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ வெளியாகவுள்ளது.
‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனிடையே, தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரை தனது அடுத்த படத்தின் இயக்குநராக முடிவு செய்திருக்கிறார் என்பதுதான் அந்த தகவல்.