தனுஷ் கால்ஷீட் பிரச்சினை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆர்.கே.செல்வமணி மற்றும் கதிரேசன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் கதிரேசன் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால், ‘இட்லி கடை’ படம் தொடங்கப்பட்டபோது, இது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. தற்போது இதே தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.