புதுடெல்லி: ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தில் (பிஜேடி) இணையும் பொருட்டு விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தமிழர் வி.கே.பாண்டியன். இவரது மனைவி சுஜாதாவும் தன் ஐஏஎஸ் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த தமிழரான வி.கே.பாண்டியன் 2000 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். ஒடிசா மாநிலப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். தம் பணிக்காலத்தில் சிறந்த அதிகாரியாகப் பெயரெடுத்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானார்.