தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த ஆண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை அரசு தன் முன்னுரிமை கொள்கையாக கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும்.