திருநெல்வேலியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிபவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் முன்னேற்றம் இல்லை. இறுதியாக பேராசிரியைக்கு (அனீமியா) கடும் ரத்தசோகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பேராசிரியையிடம் அவரது பணியிடத்தில் கதிர்வீச்சு தன்மையுள்ள பொருட்கள் எதுவும் இருக்கிறதா என்று மருத்துவர் கேட்டுள்ளார். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கதிர்வீச்சு தன்மை கொண்ட பொருட்களை வீட்டில் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டபோது, அவரது வீட்டு படுக்கை அறைக்கு நேர் மேலாக மாடியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் டவர் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.