மூணாறு: மூணாறு அருகே குடியிருப்புக்குள் வந்த சிறுத்தைப் புலி வீட்டு முன்பு படுத்திருந்த வளர்ப்பு நாயை கவ்வி தூக்கிச் சென்றது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணியை மும்முரப்படுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தின் அருகில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மூணாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் நிலவியல் அமைப்பும், காலச்சூழலும் இங்கு அதிகம் உள்ளது. இருப்பினும் வனப்பகுதி சூழ்ந்திருப்பதால் விலங்குகள் நடமாட்டமும் அதிகம் இருக்கிறது. யானை, காட்டெருமை, சிறுத்தைப் புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி வந்து விடுகின்றன.