சென்னை: வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம். முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது SMS அனுப்பப்படுகிறது.
The post வீட்டு உபயோக சிலிண்டர்கள் இனி ஆண்டுக்கு 15 மட்டுமே: எண்ணெய் நிறுவனங்கள் தகவல் appeared first on Dinakaran.