நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தனது 6-வது தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக ‘பழிவாங்கும் நேரம்’ என்றெல்லாம் இன்னதுதான் என்று இல்லாமல் இப்போட்டிக்கு போலி விளம்பரங்களையும் ஹைப்களையும் கொடுத்தனர். கடைசியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தோனியின் பலவீனமான படையை சிதறடித்து விட்டனர்.
சிஎஸ்கேவை ஒட்டுமொத்தமாகக் கலைத்து புதிய அணியைக் கட்டமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. வடிவேலு ஜோக்ஸ் மற்றும் மீம்களின் படையெடுப்பு போல் சிஎஸ்கே தனது வயதான வீரர்களுடன் பழைய டெக்னிக்குகளுடன் ‘பில்டிங்கு ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’ என்பது போல் உள்ளது. நம் கேள்வியெல்லாம் வயது என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். பவுண்டரி அடிக்கும் முயற்சியோ எண்ணமோ கூட இல்லாமல் எப்படி டி20 லீகில் ஆட முடியும் என்று புரியவில்லை. தோனியின் கேப்டன்சி ஒருபுறம் எந்த விதப் புரிதலும் இல்லாமல் கேப்டன்சி என்றால் என்னவென்றே தெரியாமல் செய்வது போல் உள்ளது. இவரா 3 ஐசிசி கோப்பைகளை வென்றார்? ஆச்சரியமாகவே உள்ளது. அதெல்லாம் வெறும் ‘பிறழ்வு’ (Aberration) என்பது போலவே இப்போது தெரிகிறது.