பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
மே மாதம் பெய்த கோடை மழை, பின்னர் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக இளநீர் விற்பனை குறைந்தது. ஆனால் மழையின் காரணமாக இளநீர் உற்பத்தி அதிகரித்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூர்களுக்கு இளநீர் அனுப்புவது அதிகரித்துள்ளது.