அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனால் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கும் எதிராகவும் அமெரிக்கா கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ரஷ்யா ராணுவத்தை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்களை கொடுத்து உதவியது. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபர் ஆனார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அதிபர் ட்ரம்ப் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். இதனால் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தடலாடியாக மாற்றம் ஏற்பட்டது. ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு அதிபர் ட்ரம்ப் பேசினார்.