திமுக தலைவர் ஸ்டாலினின் திமுக கட்டமைப்பு சீரமைப்பு நடவடிக்கையில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் நீக்கப்பட்டு அந்த இடத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.
தன்னை உதயநிதியின் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டு டாம்பீகம் செய்துவந்த மதுரா செந்தில் மா.செ. பதவியிலிருந்து தூக்கப்பட்டதை மாவட்ட திமுக-வினர் இன்னமும் வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.