விருத்தாசலம் : வேப்பூர் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த, வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் நரேஷ் (5). நரேஷ் நேற்று வீட்டில் தனது பாட்டியுடன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது வீட்டின் அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சல் போட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குளத்தில் இறங்கி சிறுவனை தேடிப் பார்த்தபோது இறந்த நிலையில் சிறுவன் கிடைத்தான்.
இதையடுத்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து சென்ற வேப்பூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வேப்பூர் அருகே 5 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.