சென்னை : வேறு மொழியை பயிற்று மொழியாக கொண்டு தமிழில் தேர்வு எழுதியோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த அரசாணையில்,” முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கே தமிழ் வழியில் படித்தவருக்கான பணியில் 20% முன்னுரிமையில் அரசு வேலை வழங்கப்படும், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post வேறு மொழியை பயிற்று மொழியாக கொண்டு தமிழில் தேர்வு எழுதியோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை இல்லை : தமிழக அரசு அரசாணை appeared first on Dinakaran.