சென்னையில் அமித் ஷா உடனான இரண்டாம் கட்ட சந்திப்புக்கு பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அவரது வலது கரமாக வலம் வந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளரும் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான கோவை சந்திரசேகர் அதிமுக-விலிருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
சின்னதாய் கட்டுமானப் பணிகளை செய்து வந்த சந்திரசேகர், எஸ்.பி.வேலுமணியின் அனுகிரகம் பெற்றதும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கோவை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் நம்பிக்கையான ஒப்பந்ததாரராக மாறிப்போனார். கோயில் திருப்பணிகள், சொந்தச் செலவில் பொதுப்பணிகள் என கோவை வடவள்ளி தொடங்கி மருதமலை வரைக்கும் அறியப்பட்ட நபராக சந்திரசேகர் வலம் வந்தார்.