
சென்னை: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேர் நேரடியாகவும், 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து அங்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றினார்.

