பாட்னா: ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிச் தலைவரும், பிஹாரின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “76 வயதான லாலு, பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குமூலங்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும். என்றாலும் லாலுவும் அவர்களின் குடும்பத்தினரும் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் எனக் தோன்றுகிறது” என்று தெரிவித்தனர்.