சென்னை: தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன், செயலாளர் மேரிலில்லிபாய், செயற்குழு உறுப்பினர்கள் காவிரி டெல்டா பாசனதாரர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் சாமி நடராஜன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில தலைவர் பசுமை வளவன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநில தலைவர் வி.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அப்போது, மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கை தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் குறித்த புதிய தேசிய கொள்கை கட்டமைப்பு வரைவு நகலை கடந்த நவ.25-ம் தேதி வெளியிட்டுள்ளது.