சென்னை: வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட திமுக அரசு முயற்சி செய்வதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எம்.பி.க்களை கூட்டி 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.