ஐபிஎல் 2025 தொடரின் 5-வது போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் பஞ்சாப் கிங்ஸ் நெருக்கமான ஒரு விரட்டல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு கடைசி ஓவரில் ஸ்டிரைக் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
எதிர்முனையில் ஷஷாங்க் சிங் அற்புதமாக அதிரடி ஆட்டத்தை ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதால் ஸ்ரேயாஸ் ஐயர் தன் சதத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் அணியின் ஸ்கோர்தான் முக்கியம் என்று ஆட பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 என்று ரன்களைக் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டர் சாய் சுதர்சன் 74, ஜாஸ் பட்லர் 54, கில் 33, ருதர்போர்ட் 46 என்று வெளுத்துக் கட்ட 232 ரன்களை விரட்டி அச்சுறுத்தியது.