சம்பல்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த 'நவம்பர் 24' வன்முறை வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ஷாஹி ஜமா மசூதி தலைவர் ஜாஃபர் அலியை அம்மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று காவலில் எடுத்தனர்.
ஷாஹி ஜமா மசூதி தலைவர் கைது செய்யப்பட்டாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சம்பல் கோட்வாலி பொறுப்பாளர் அனுஜ் குமார் தோமர், "வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் (ஜாஃபர் அலி) சிறப்பு புலனாய்வு குழுவால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.