ஷுப்மன் கில் எட்ஜ்பாஸ்டன் வெற்றியில் நாயகனாக உயர்ந்தெழுந்து நிற்கிறார். 430 ரன்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அருமையான கேப்டன்சியில் இங்கிலாந்தை வெற்றி கொள்ளவும் செய்தார் என்பது செய்தி, ஆனால் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் கூறுவது என்னவெனில் ஷுப்மன் கில் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை, இங்கிலாந்து அணியைக் களைப்படையச் செய்து சிதைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
‘தி கார்டியன்’ இதழுக்கு அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: ஷுப்மன் கில் ஒரு அரிய இன்னிங்ஸை ஆடிவிட்டார். வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை, மாறாக இங்கிலாந்து அணியை களத்தில் நீண்ட நேரம் பந்து வீச வைத்து, பீல்டிங் செய்ய வைத்துக் களைப்படையச் செய்துவிட்டார். களைப்பினால் இங்கிலாந்து பேட்டர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் போனது, எந்தப் பந்தை ஆடுவது, எந்தப் பந்தை விடுவது என்பதில் தெரிவுகளே இல்லாமல் ஏனோ தானோவென்று ஆட நேரிட்டது. இதோடு கிரீசில் அவர்களது இயக்கமும் கால்நகர்த்தல்களையுமே கில்லின் இன்னிங்ஸ் பாதிக்கச் செய்தது.