தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆலைக்கு ஆதரவான அமைப்புகள் சார்பில் இந்திய உணவுக் கழக குடோன் அருகே இன்று (பிப்.20) ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று தகவல் பரவியதால், தூத்துக்குடியில் இந்திய உணவுக்கழக குடோன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடியில் இன்று பரபரப்பு நிலவியது.