ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஹஜ்-க்கு விமான சேவையைத் தொடங்க ஸ்பைஸ் ஜெட் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தானிடையே நிலவிய பதற்றம் காரணமாக நாட்டில் மூடப்பட்ட 32 விமானநிலையங்களில் ஸ்ரீநகர் விமானநிலையமும் ஒன்று. இந்த விமானநிலையம் குடிமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று (திங்கள்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது.