ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் வெளி நோயாளியாக சுமார் 1,400க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 150 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் மாத்திரை, மருந்து குடோன் உள்ளது.
இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ உடனே அணைக்கப்பட்டதால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் தப்பின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீ appeared first on Dinakaran.