தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. கெட்டியம்மாள்புரத்தில் பேருந்தை மறித்த 3 பேர் மாணவர் தேவேந்திரனை இழுத்து வெளியில் போட்டுள்ளனர். கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல், பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடியது. வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்ற 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.